எம்மைப்பற்றி
நேசக்கரம் உருவாகியது ஏன் ?
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் ஆதரவற்ற பெற்றோரை இழந்த சிறுவர்கள் ஆதரவற்ற பெண்களுக்கான வாழ்வாதார நம்பிக்கைகளை ஏற்படுத்து முகமாகவும் ஆரம்பிக்கப்பட்டது.
நேசக்கரம் எவ்வாறு ஆதரவற்றவர்களை இனங்காண்கிறது ?
நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் ஆதரவு தேவைப்படுவோரை கிராமங்கள் ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் நேரில் சென்று பார்வையிட்டு செயற்குழுவிற்கு அறிக்கைகளாக விபரங்கள் கொடுப்பார்கள். அறிக்கைகள் தெரிவிக்கும் தரவுகள் அடிப்படையில் வாழ்வாதார மற்றும் கல்வித் தேவைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது.
போர் நடைபெற்ற காலங்களில் நேரடிச்சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் அற்றிருந்தமையால் புனர்வாழ்வுக்கழகம் மற்றும் பெண்கள் புனர்வாழ்வு [...]
