Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Web-Search

Welcome to Tamilwebradio

களனிவெளி வரை மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை : திணைக்களம் அறிவிப்பு

வீரகேசரி - களனிவெளி வரையிலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை இன்றும் நாளையும் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொட்டாவை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளுக்கான ரயில் பாதையில் திருத்தப் பணிகள் மேற்கொள்வதன் காரணமாகவே குறித்த பகுதிக்கான ரயில் சேவையை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அவிசாவளையில் இருந்து இன்று காலை 6.00 மணிக்கு புறப்பட்ட ரயில் இன்று காலை 7.43 அளவில் கொட்டாவை ரயில் நிலையத்தை வந்தடைந்த பின்னர் அந்த பகுதிகளுக்கான சேவையானது நாளை பிற்பகல் வரை இடம்பெறாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அவிசாவளையில் இருந்து கொட்டாவை வரையிலான ரயில் சேவையானது நாளை பிற்பகல் 4.10 அளவில் இடம்பெறுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டாவை வரையிலான ரயில் சேவையானது இன்று பிற்பகல் 2.25 மணிக்கும் கொட்டாவையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான ரயில் சேவை மீண்டும் நாளை காலை 7.43மணிக்கும் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடற்படையினர் அழைத்துச் சென்றவர்களே காணாமல் போயுள்ளனர் : உறவினர்கள் தகவல்

வீரகேசரி - மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிக எண்ணிக்கையானோர் கடற்படையினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்களே என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

 

லண்டனில் 'இலங்கை வங்கி யூ. கே. லிமிடெட்' : தலைவர் தகவல்

வீரகேசரி இணையம் 2/13/2010 12:49:32 PM - லண்டனில் உள்ள இலங்கை வங்கிக் கிளையை பிரதான வங்கியாக மாற்றியமைத்து அதனூடாக உலக நாடுகளில் கிளைகளைத் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்ததாக அரச இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Read more...

 

அரசுடன் பேச்சு நடத்த உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை : ததேகூ

வீரகேசரி - ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் தாம் அழைக்கப்பட்டால் மக்களின் தேவை கருதி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

Read more...

 

தமிழ் வர்த்தகரிடம் கப்பம்பெற முயன்றவர்கள் வெள்ளவத்தையில் கைது

வீரகேசரி - வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 70 லட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Last Updated (Saturday, 13 February 2010 17:25)

Read more...

 

தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க திரைமறைவுச் சதி தீட்டப்படுகிறது:வினோநோகராதலிங்கம்

வீரகேசரி - எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது வட-கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச் செய்து , நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதி ஒன்று தீட்டப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read more...

 

ஆயுதக் கொள்வனவுக்காக இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது ரஷ்யா

ஆயுதத் தளபாடங்கள் வாங்குவதற்காக இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ரஷ்ய விஜயத்தின்போது இது தொடர்பான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மொஸ்கோவை சென்றடைந்தார். இவ்விஜயத்தின் ஒப்பந்தத்தில் கைச்சாத்தி டப்படுவதற்காக ஒப்பந்தமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் துணை நிதி அமைச்சர் பான்கின் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

 

"ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ரத்துச் செய்வதுகுறித்து முறையான தீர்மானம் எடுக்கப்படவில்லை''-ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர்

வீரகேசரி - இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் முறையான தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அதற்கு இம்மாத இறுதிவரை அவகாசம் உள்ளது எனவும் பெல்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் லக்ஸம்பேர்க்கிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார்

Read more...

 

ஜனாதிபதி இன்று ரஷ்யா பயணம்

வீரகேசரி - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் ரஷ்யாவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

 

ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

வீரகேசரி-இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐ.நா.வின் மூன்று சாசனங்களை மீறியதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Last Updated (Saturday, 06 February 2010 17:55)

Read more...

 

வரலாற்றுக் கடமையை நாம் தவறவிடக் கூடாது தவறிழைத்தால் வருந்த வேண்டிய நிலை ஏற்படும் திருகோணமலையில் சம்பந்தன் எம்.பி. தெரிவிப்பு

User Rating: / 1
PoorBest 

 

(வீரகேசரி) - ஜனாதிபதித் தேர்தலானது தமிழர்களாகிய நமது வாழ்வில் மட்டுமல்ல எமது எதிர்காலத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே இந்த தேர்தலை முழுமையாக பயன்படுத்தவேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை நாம் தவற விடக் கூடாது. தவறிழைத்தால் அதற்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

Read more...